சனி, ஜூன் 18, 2011

சப்த மாதர்கள் சுலோகம்






பிராம்மி:தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்

பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

பிராம்மி: மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:

ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

பிராம்மி: காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே

தேவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.


சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மகேஸ்வரி

மகேஸ்வரி:தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்

வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மகேஸ்வரி:மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:

ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

மகேஸ்வரி: காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


சப்தகன்னியரில் மூன்றாவது இருப்பவள் கவுமாரி.

குழந்தைச் செல்வம் வேண்டுவோர்

இவளை வழிபட நிச்சயம் குழந்தை பிறக்கும்.

கவுமாரி:தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை

பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி

பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா

மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்

ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள

கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

கவுமாரி: மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:

ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

கவுமாரி: காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

சப்த கன்னிகைகளில் நான்காவது இருப்பவள்

வைஷ்ணவி

.இவளை வழிபடுபவர்களுக்கு செல்வவளமும்,

தங்கமும் குவிந்து கொண்டே இருக்கும்.

வைஷ்ணவி:தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:

தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

வைஷ்ணவி:மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:

ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்


சப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.

இவளை வழிபட்டுவந்தால் பயம் நமக்குப்போகும்.

எதிரியே இல்லாத நிலையை நமக்கு உருவாக்குபவள்.


வராஹி:தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி:மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

வராஹி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


சப்தகன்னிகைகளில் ஆறாவதாக இருப்பவள் இந்திராணி.

இவளை ஒரு ஆண் வழிபட்டுக்கொண்டே இருந்தால்,

அவனுக்கு மிகச்சிறந்த மனைவி அமைவாள்.

ஒரு பெண் வழிபட்டுக்கொண்டே இருந்தால் அவளுக்கு

மிகச்சிறந்த கணவன் அமைவான்.

இதுவே இவளது சிறப்பு.

இந்திராணி:தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை

இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

இந்திராணி:மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:

ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

இந்திராணி:காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.


சப்தகன்னிகைகளில் ஏழாவதாக இருப்பவள் சாமுண்டி.

இவளது மறுபெயர் பத்திரகாளி.

முடியாத பிரச்னைகளை முடித்துவைக்கும்

சாமர்த்தியம் உடையவள்

சப்த கன்னிகைகளில் அதீதமான பலம் கொண்டவள்.

சாமுண்டி:தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை

முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா

சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.

நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே

நிஷண்ணசுவா!

ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா

சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

சாமுண்டி:மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:

ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

சாமுண்டி: காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

புதன், ஜூன் 15, 2011

தோஷம் நீங்க

தோஷம் நீங்க வழிபட வேண்டிய ஆலயங்கள்-



ராசி---------- ஆலயம்


மேஷம்------------ ராமேஸ்வரம்

ரிஷபம் ------------திருப்பதி

மிதுனம் -----------பழனி

கடகம் -------------ராமேஸ்வரம்

சிம்மம் ------------ ஸ்ரீ வாஞ்சியம்

கன்னி -------------திருக்கழுக்குன்றம்

துலாம் ------------திருத்தணி

விருச்சிகம் ------காஞ்சிபுரம் 

தனுசு --------------மாயவரம் 

மகரம் -------------சிதம்பரம் 

கும்பம் -----------  தேவிபட்டினம் 

மீனம் -------------வைதீஸ்வரன் கோவில்  

வெள்ளி, ஜூன் 10, 2011

ஆனி மாதம்


.ஆனி மாதத்தில் சூரியனின் நிலை.
 
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி

ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும்.

சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு

வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி

கொண்ட கால அளவே இம் மாதமாகும்.

வசதிக்காக இந்த மாதம் 32 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

இது, ஆங்கில மாதம் ஜூன் 16 லிருந்து
 
ஜூலை 16 வரை உள்ள 31 நாட்களாகும். [16 -06 -2011 ----16 -07 -2011 ]

 சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு

மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார்.

இதை உத்தராயண காலம் என்பார்கள்.

 ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி. பயணிக்கிறார்.
இதை தட்சிணாயணம் என்பார்கள்


ம் மாதத்தில் பிறந்த அடியார்கள், இம்மாத கோவில் உற்சவங்கள்

   பற்றி   காணலாம்


சிவாம்சமே  ஆதிசங்கரராக அவதரித்து மீண்டும்

ஈசனுடன் கலந்தது என்பர்.  

அந்த சிவாம்சமே முருகனின் வேண்டுகோளுக்கிணங்க

திருவண்ணாமலையில் ஆனி மாதம், மூல நட்சத்திரம்,

பௌர்ணமி திதியில் அருணகிரியாகப் பிறந்தது என்பர்



ஆனி மாதம் சுக்ல பக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்  விஷ்ணு சித்தர் எனும்  பெரியாழ்வார்.

ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை ஆவார்.


ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர். நாதமுனிகள்

ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த

இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர்

இந்த நாதமுனிகள் தான்!

தொலைந்த  பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!

பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில்

தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்!

திவ்யப் பிரபந்தங்களை ராகதாளங்களுடன் பாடி,

ஆடும் முறையை அரையர் சேவை என்ற பெயரின்

ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி வைத்தார்.

இன்றும் இப்பெயரில் அரையர் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


"திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்! "என

சிவபெருமானிடமே பட்டம் பெற்றவர்
 இவரது குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் இறைவனுடன் கலந்தார்

மாணிக்கவாசகர்

அந்த நாளில் ஆவுடையார் கோவிலிலும் (புதுக் கோட்டை மாவட்டம்),

 திருவாதவூர் திருமறைநாதர் கோவிலிலும்,

 மாணிக்கவாசகர் கோவிலிலும்,

 தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவிலிலும்

குருபூஜை நடத்தப்படும்.


அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை-

ஊஞ்சல் உற்சவம்.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி

வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில்

சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட,

கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள்,

மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட

ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது

ஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே

பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது.

சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும்,

 ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும்,

தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது.

சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும்

 ஸ்ரீமகாலட்சுமியும் இவளே,

அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும்

சரஸ்வதி என்பவளும் இவளே!

அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்! பயமில்லை, ஜெயமுண்டு!” எனச்

சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே.

அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.

ஸ்ரீவித்யா வழிபாடு என்னும் சாக்த வழிபாட்டு முறையில்

அம்பிகையை வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி

கொண்டாடுவதன் மூலம் வழிபடுகிறார்கள்.

அவை

சாரதா நவராத்திரி- தமிழ் புரட்டாசி மாதம்,

வசந்த நவராத்திரி-தமிழ் பங்குனி மாதம்

ஆஷாட நவராத்திரி ஆனி மாதம்

சியாமளா நவராத்திரி தை மாதம்

சாரதா நவராத்திரி ஸ்ரீ சரஸ்வதிக்கும்,

வசந்த நவராத்திரி ஸ்ரீராஜ மாதங்கிக்கும்,

ஆஷாட நவராத்திரி ஸ்ரீ வாராஹிக்கும்.,

சியாமளா நவராத்திரி ஸ்ரீ ராஜச்யாமளைக்கும் கொண்டாடப் படுகிறது



சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில்

சிறப்பான விழாக்கள் இரண்டு.

ஒன்று மார்கழித்திருவாதிரை.

மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்.

இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.


ஆனித்திருமஞ்சனம் :

பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது

ஆனி உத்திரத்திருவிழா.

ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்

அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும்

ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர்


 ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்திற்கு பத்து நாள் முன் கொடி ஏற்றுவர்.

முதல் நாள் முதல் எட்டாம் நாள் வரை உற்சவ மூர்த்திகள் ஒவ்வொரு

நாளும், தங்க வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருவார்கள்.

ஒன்பதாம் நாள் தேர் திருவிழா. இதில் மூலவரான நடராஜர், சிவகாமி,

விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள்

தேர்களில் உலா வருவர். 

. நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில்

உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும்

ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார்.

ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன

அபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.

 பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம்

செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர்.

பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து

சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும்.

அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில்

கடாபிஷேகம் நடைபெறும்
 


ஆனித் திருமஞ்சணம்,ஆனி மாதத்தில் பவுர்ணமி

கேட்டை நட்சத்திரத்தில் வரும்.போது சிவன் கோயில்களில்

சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள்.

.

அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், பாண்டிச்சேரி-

ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு

மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.


சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார்.

அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில்

மாங்கனிகளை வீசுவர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது

 சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.

மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில்

கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது.

அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார்.

அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும்.

 பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு,

 சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும்,

 காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும்.

அம்மையார் கோயில் தீப்பந்தத்தை,

சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர்.

அம்மையார், ஜோதி வடிவில் இறைவனோடு ஐக்கியமாவதாக ஐதீகம்.


ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா'' என்று பெயர்.

பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

 பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி

பூஜை செய்வது ஆகும்.

எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு

செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.

 வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.

ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

 ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா'' எனப்படும்.

இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால்

ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும்,

கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும்,

 பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும்

சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.


 அருள்மிகு கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,

கம்பம் ,தேனீ மாவட்டம்- திருமங்கை நாட்டை ஆண்ட நீலன் என்னும் மன்னன்,

தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு

உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து,

அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி

அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.

அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள்,

திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.

அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி,

"திருமங்கையாழ்வார்' என்று பெயர்பெற்றார்.

திருமங்கை யாழ்வாரின் பக்தியையும்,

அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக,

 இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில்,

"திருமங்கையாழ்வார் திருடிய வைபவம்' நடத்துகின்றனர்.

அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து,

காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர்.

அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும்,

இதை "பட்டோலை வாசித்தல்' என்பர்.

அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்



வியாழன், ஜூன் 09, 2011

ஏகாதசி விரதம்

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது.
இந்த நாளில் விரதம் ஆரம்பித்து

தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்)

விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.

* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'' எனப்படும்.

பகையை வெல்ல உதவும்.

* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா'' எனப்படும்.
இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும்.

வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.
*
தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா'' எனப்படும்.

இன்று பழங்கள் தானம் செய்வதால்

ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும்.

அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர்.

மன உளைச்சல் அகலும்.

வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும்.

இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து

பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.

ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில்

எள்ளுடன் தானம் தர வேண்டும்.


மேலும் பாதுகை, கூடை, கரும்பு,

நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து

ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என

இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா'' எனப்படும்.

இந்த நாளில் 7 வகையான தானியங்களை

ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி

கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து

பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.

வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும்.

கணவனை பிரிந்துவாடும் நங்கைகள்

கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ'' எனப்படும்.

இன்று நெல்லி மரத்தடியில்

பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து

நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால்,

புண்ணிய நதிகளில் நீராடிய பலனும்,

ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா'' எனப்படும்.

நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும்.

திருமண யோகம் தரும்.

* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' எனப்படும்

பாபத்தை போக்கும்.

நல்ல பேற்றினை ஏற்படுத்தும்.

துரோகிகள் விலகுவர்.

* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ'' எனப்படும்.

உடல் சோர்வு நீக்கும்.

பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

ரத்த சோகை அகலும்.

வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.

* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ'' எனப்படும்.

உடல் ஆரோக்கியம் தரும்.

சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
*
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா'' என்று பெயர்.

பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி

பூஜை செய்வது ஆகும்.

எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும்

இணைத்து வழிபாடு செய்தால்

வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.

வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும்

. ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா'' எனப்பெயர்படும்.

இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால்

ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும்,

கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும்,

பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும்

சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி'' எனப்படும்.

இஷ்ட நற்சக்திகளை தர வல்லது.

முன்னோர்களின் ஆசியையும்,

அவர்களது எதிர்பார்ப்புகளை

நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.

ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி'' என்று பெயர்.

இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு

வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய

கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா'' என்று பெயர்.

குழந்தைகள் கல்வியில் சிறக்கவும்

விரும்பிய மேல்படிப்பு அமையவும்,

சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா'' எனப்படும்.

இன்று விரதம் இருந்து

தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து

வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும்.

வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று

ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்

மன பயம் அகலும், மரண பயம் அகலும்,

கொடிய துன்பம் விலகும்.

ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள்

பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும்.

காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா'' எனப்படும்.

இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம்

இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள்.

நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில்

தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா'' என்று பெயர்.

அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து

இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று

பல்லாண்டுஅரசு செய்தான்.

எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால்

குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம்.

புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில்

கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா'' எனப்படும்

வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும்,

நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
*
ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா'' எனப் பெயர்

இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால்

அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால்

நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென

அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.

ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ'' என்று பெயர்.

கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது.

இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும்

பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால்

மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா'' என்பர்.

இன்று இருக்கும் விரதம்

இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா'' எனப்படும்.

கமலம் என்றாள் தாமரை.

தாமரை மலரில் இருந்து அருள் தரும்

அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால்

நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.

ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும்

தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்)

"மோட்ச ஏகாதசியில்'' உண்ணாமல்

அன்று முழுவதும் மட்டுமின்றி

முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து

செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம்.

அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.