அர்த்தாஷ்டம சனி என்பர்.
இக்காலங்களில்
அலைச்சல் , டென்சன்,
சுக வாழ்வில் பதிப்பு உண்டாகும்.
7 ல் சஞ்சரிக்கும் காலம்
கண்ட சனி என்பர்.
இக்காலங்களில்
உடல் நிலை பாதிப்பு,
கணவன் மனைவிக்கு கருத்து வேற்றுமை,
கூட்டு தொழில் பிரச்சனை,உண்டாகும்.
8 ல் சஞ்சரிக்கும் காலம்
அஷ்டம சனி என்பர்.
அதிகப்படியான சோதனைகள்,
உடல்நிலையில் பாதிப்பு,
நெருங்கியவர்களால் மருத்துவ செலவு உண்டாகும்.
ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய
மகரம், கும்பம்,துலாம் ஆகிய ராசிகளில் இருந்தாலும்,
சனியின் நட்சத்திரங்களான
பூசம், அனுஷம், உத்தரட்டாதி நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கும் சனி பகவானால்
அதிகப்படியான பாதிப்பு நேராது.
ஒருவருது வாழ்நாளில், சனி பகவான்
மூன்று முறை வலம் வருகிறார்.
முதல் 30 வருடத்துக்குள் ஒரு முறை
60 வருடத்துக்குள் இரண்டாவது முறை
90 வருடத்துக்குள் மூன்றாவது முறை நிகழ்கிறது.
முதல் வலத்தை மங்கு சனி,
அடுத்ததை பொங்கு சனி,
மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்.
இப்படி முன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில்,
முதல் பிரிவு கவுமாரம் எனப்படும்.
அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர்.
அடுத்து, யௌவன என்னும் இளமைப் பருவம்
எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு
அலசி ஆராயும் திறனுடன், நல்லது, கெட்டதை அறிந்து
செயல்பட்டு வாழும் காலம் அது.
துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி,
மனோபலமும், சிந்தனைத் தெளிவும் கொண்டு
செழிப்புடன் விளங்குகிற பருவம் இது.
மூன்றாவது, முதுமை பருவம்.
தேக ஆரோக்கியமும் மனோபாலமும் குறைகிற இறுதிப் பகுதி.
சிறு வயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில்
சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும் போது,
சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும்.
மனதில் பதிந்த எண்ணங்கள்,
முழு வளர்ச்சியை எட்டாத நிலையில்,
சனியின் தாக்கம் முடங்கிவிடும்.
ஆகவே, மங்கு சனி என்பர்.
இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி,
கிரகிப்பதிலும் வளர்ந்து
சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை
அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது.
ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
இன்ப- தன்பம் நிறைந்த வாழ்வில்,
துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று
மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் .
இளமையில் கற்ற கல்வியுடன்
விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க,
சனி பகவானின் தாக்கத்தை,
திருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும்.
ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் .
முதுமையில் சோர்வைச் சந்தித்த
உடலும் உள்ளமும் கொண்டிருக்க,
சனியின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் போகிறது.
சனியின் விருப்பப்படி
தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால்,
வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க
அவன் செயல்பாடு உதவும்.
ஆகவே, போக்கு சனி என்றனர்.
ஆக, முதல் பகுதி வளரும் பருவம்,
2-ம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று,
இன்பத்தை அனுபவிக்கிற பருவம்
இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம்.
இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி,
சனி பகவானின் செயல்பாடு இருப்பதை
ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது
அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ
அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்.
அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.
முடிவில் அதனை வட்டியும் முதலுமாக
உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார்.
இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை
சனி பகவான் மேற்கொள்கிறார்.
சனீஸ்வர தீபம்
முக்கூட்டு எண்ணெய்யினால்
நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்
ஓர் இரும்புச் சட்டியில்
வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத்
திரியாக இட்டு
மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும்.
இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம்.
இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம்,
வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து
சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்.
இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத
சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து
சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
சனி பகவான் பூஜை
சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
சனிக்கிழமை காலை குளித்து
சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும்.
எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள்,
கசப்பு பதார்த்தகங்கள் படைத்து
பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும்.
எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில்
சிறிது போட்டு கட்டி,
திரி போல் திரித்து விளக்கில் போட்டு
எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும்.
பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில்
சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து
காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
பொதுவாக
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது,
ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
சனிப்பெயர்ச்சி யாகங்களில் கலந்து கொண்டு
சனிக்கு பரிகாரம் செய்யலாம்.
முடிந்தால் திருநள்ளாறு பரிகார ஸ்தலத்திற்கும்
சென்று பரிகாரம் செய்யலாம்.
சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை
தலை, கை, கால் மூட்டுகள்,
தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி,
சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும்.
இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல்
மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும்.
சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால்
அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும்
இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது.
ஏழரை சனிக் காலத்தில் கவனக் குறைவால்
மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும்.
சனியனே, முண்டமே என்றுதிட்டாமல்இருப்பதுஅவசியம்.
இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும்.
மேலும் சனிக் கிழமைகளில்
எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும்,
விதவைகளுக்கும்முடவர்களுக்கும்
முதியவர்களுக்கும் உதவி வேண்டும்.
நள புராணத்தைப் படிக்கலாம்
அல்லது கேட்கலாம்.
சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும்
சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.
சனி பகவான் காயத்ரி!
""காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்னோ மந்தப்ரசோ தயாத்''
வாக்கிய பஞ்சாங்கப்படி மார்கழி மாதம் 4 ந் தேதி,
57 நாழிகை, 26 விநாடி அதாவது
21-12-2011 [புதன்] காலை 5 மணி 20 நிமிடத்திற்கு
கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு
இடப் பெயர்ச்சி அடைகிறார் .
சனிப் பெயர்ச்சிப் பலன்களை
www .kanavugal -amirtham .blogspot .com ல் பார்க்கவும்.