துண்டிவிநாயகர்
விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார்.
சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே
விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில்
காட்சி அளிக்கிறார்.
செந்தூர வர்ணத்தில்குங்கும அபிஷேகம் செய்கிறார்கள்.
சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே
விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில்
காட்சி அளிக்கிறார்.
செந்தூர வர்ணத்தில்குங்கும அபிஷேகம் செய்கிறார்கள்.
.துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை
மிகுந்த மரியாதையுடன்அழைத்துவழிபடுகிறார்கள்.
மிகுந்த மரியாதையுடன்அழைத்துவழிபடுகிறார்கள்.
காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல்
போகக்கூடாது என்பது சம்பிரதாயம்.
இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான்
பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள்.
பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள்.

காசி விஸ்வநாதர் திருக்கோயில்-
கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்தூர் ராணி அகல்யாபாய்
இக்கோயிலைக் கட்டினார்.
ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது.
வெள்ளித்தகடு பதித்த தொட்டியில்,
தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார்.
இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான்.
குறுகலான பாதையில் சென்று
கோயிலை அடைய வேண்டும்.
பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே
ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.
அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும்
என்ற அவசியம் இல்லை.
காசிவிஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம்;
அபிஷேகமும் செய்யலாம் .
கோவிலின் உள்ளே நேபாள அரசரால்
வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது.
இந்த மணியின் நாதம்
வெகு தொலைவிற்கு ஒலிக்கும்.
ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில்
பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம்
கோவில் காலை 3.00 மணி முதல்
இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும்
இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது.
வழிபாட்டிற்கான பூசை பொருட்கள்
காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து
எடுத்துச் செல்லப்படுகின்றன.
இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில்
அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள்.
காசியாத்திரை செல்வது எப்படி?
காசிக்கு புனிதயாத்திரை செல்வதற்கு முன்பு,
இராமேஸ்வரம் வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி
பின்னர் அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
அக்னி தீர்த்தக் கடலில் மணல் எடுக்க வேண்டும்.
அதை சேது மாதவர் சன்னதியில்
அந்தணர் மூலம் மூன்று பிரிவாக பிரித்து
பூஜை செய்ய வேண்டும்.
ஒரு பிரிவை சேது மாதவர் சன்னதியில்
விட்டுவிட வேண்டும்.
மற்றொரு பிரிவை அந்தணருக்கு
தானமாக வழங்க வேண்டும்.
மூன்றாவது பிரிவை தன்னுடன் எடுத்துக் கொண்டு
காசிக்குச் செல்ல வேண்டும்.
இந்த மூன்றாவது பிரிவு மணலை
கங்கையில் சேர்த்திட வேண்டும்
.காசியில் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும்.
அதன்பிறகு கங்கையில் நீர் எடுத்துக்கொண்டு
இராமேஸ்வரம் திரும்ப வேண்டும்.
கொண்டு வந்த கங்கை நீரால்
ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்
.இவ்வாறு செய்வதே முறையான காசி யாத்திரை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக