ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

சிறு குறிப்பு

கோவிலில்   செய்ய வேண்டியது-

கோவிலுக்குள் சென்றவுடன்

கொடிமரம் முன்பு வணங்க வேண்டும்.

பின், உள்ளே சென்று ஒரு முறை வலம் வந்து

மூலவரை தரிசிக்க வேண்டும்.    

பின், அம்பாள் சந்நிதி சென்று தரிசிக்க வேண்டும்.


இப்பொழுது இரெண்டாம் முறை வலம் வர வேண்டும்.

அப்போதுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

பின் மூன்றாம் முறை வலம் வரும் போது தான்

சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை வலம் வரும் போதும்

மூலவரை மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

மூன்று முறை ப்ரதக்ஷிணமும் [வலம் வருதல்]


ஐந்து முறை நமஸ்காரமும் செய்ய வேண்டும்.



மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில்

மகாலச்சுமி நம் வீட்டுக்கு வருகிறாள்.


 அதனால் மாலையில் விளக்கேற்றியதும்

வெளி வாயில் கதவை திறந்து வைக்க வேண்டும்.

கொல்லைப்புற கதவை சாத்தி வைக்க வேண்டும்.


சுவாமி சன்னிதியில் தீபம் ஏற்றினால்

நாம் செய்த பாவங்கள் நீங்கி

புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இது விளக்கு ஏற்றுவதின் பலனே அன்றி

எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை.

அதனால் ஒருவர் ஏற்றிய விளக்கில்

நாம் மீண்டும் விளக்கேற்றினால்

அவரது பாவம் நமக்கு வராது.

நமது புண்ணியம் அவருக்கு போகாது.


சன்னிதியில் விளக்கேற்றுகிறோம் 


என்ற தூய சிந்தனையுடன் ஏற்றுவது தான்

மிகவும் முக்கியம்.

நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் .

 நன்றி- தினமலர் 







 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக