ஞாயிறு, டிசம்பர் 19, 2010

எங்கப்பன் கணேசன்



விநாயகன் வினைதீர்ப்பவன். முழுமுதல் பொருள் ஆனவன். எல்லோராலும் அறியப்படுபவன். ஈசனின் பிள்ளை. முருகனின் அண்ணன். உமையாளுக்கு உற்றவன். மனிதர்க்கு எளிதில் வசப்படுபவன். அருள் பாலிப்பவன்.
அவன் வடிவம் அழகானது; பார்ப்பவரை வசிகரிக்கும்; எளிமையானவன்.
குண்டு வயிரும், குள்ள உருவமும், யானை முகமும் கொண்டு குழந்தைகளின் செல்லப் பிள்ளை ஆகிறான். அதனால் நம் வீட்டுப் பிள்ளையாக இருக்கிறான்.
அப்பனுக்கு வானுயர்ந்த கோபுரமும், ஆயிரங்கால் மண்டபமும் கொடிமரமும், பெரிய வாகனமும் தேவை இல்லை. காட்சிக்கு எளியோன்.
குளக்கரை , மரத்தடி , தெருமுனை, முச்சந்தி, நாற்சந்தியே அவனது இருப்பிடம்
பட்டும், பீதாம்பரமும், அணிகலன்களும் போடாதவன்;
பானை வயிற்றில் ஒரு அரை துண்டுத் துணியே அவனது ஆடை;
மார்பின் குறுக்கே ஒரு பூணூலே அவனது ஆபரணம்.
அருகம் புல் சாற்றினாலே அகமகிழ்ந்து ஆயிரம் வரம் அருள்வான்.
மூசிக வாகனன்; அவலும், பொரியுமே அவனுக்கு பிடித்தமானவை.
நம் நாட்டின் சிறப்பே எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில் இருப்பதே.
அவனை உளமார வணங்கி அவன் அருளைப் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக