புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவிலில்
ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் நடக்கும்.
அதேபோல் கர வருடத்திற்கான ஆனி திருமஞ்சன திருவிழா 28-07-2011
(செவ்வாய்க் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 6 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.சிதம்பரேஸ்வர தீட்சிதர்
கோவில் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மாளுக்கு தீபாராதனை நடந்தது.
அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் 4 முக்கிய வீதிகள் வழியாக
வீதியுலா வந்தனர்.
இரவு 8 மணிக்கு மத்தள பூஜை நடக்கிறது.
29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சந்திரபிறை வாகன காட்சியும்,
30-ந் தேதி தங்க சூரிய பிறை வானக காட்சியும்,
அடுத்த மாதம் 1-ந் தேதி வெள்ளி பூத வாகன காட்சியும் ,
2-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் காட்சியும்,
3-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சியும்,
4-ந்தேதி தங்க கைலாச வாகன காட்சியும்,
5-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடனர் காட்சியும் நடைபெற்றது..
6-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை
வடம் பிடித்து இழுப்பார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன திருவிழா
7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
முன்னதாக சிவகாமசுந்தரி, நடராஜபெருமானுக்கு லட்சார்ச்சனை,
ராஜ சபையில் மகாஅபிஷேகமும், திருவாபரண காட்சியும்,
பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.
பின்னர் சிவகாமசுந்தரி, நடராஜபெருமான் ஆயிரங் கால் மண்டபத்தில்
இருந்து எழுந்தருளி 3 முறை முன்னும்,பின்னுமாக நடனமாடி
பக்தர்களுக்கு காட்சியளிப் பார்கள்.
இதனையே ஆனி திருமஞ்சனம் என்பர்.
உற்சவத்தை முன்னிட்டு கோவை சிவபிரகாச சுவாமிகளின் சர்வதேச
தரும பரிபாலன அறக்கட்டளை சார்பில் 28-ம் தேதிமுதல் ஜூலை 7-ம்
தேதி வரை சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் சத்திரத்தில்
அன்னதானம் நடைபெறுகிறது.
தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை அகவல் பாராயணமும்,
மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை பெரியபுராணம் தொடர்
சொற்பொழிவும் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக