சனி, ஜூலை 09, 2011

ஆடி மாதம்

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும்.

சூரியன் கடகராசியுட் புகுந்து

அதைவிட்டு வெளியேறும் வரையிலான

31நாள்,,28,நாடி 12 வினாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.

வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.


ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர்.

ஆடி முதல் மார்கழி வரையிலான தக்ஷியாயனமும்,

தை முதல் ஆனி வரை உத்ராயனமும் ஆகும்.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும்,

மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான்

பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.

பூமா தேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம்தான்.

அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான்

டிப் பூரமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் முன்பெல்லாம் காவிரியும், தாமிரபரணியும்,

வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்.

அதுவே ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்பட்டது.

இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள்,

குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

இந்த ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில்

விரதமிருந்து அம்மனை வழிபட்டால்

அம்மன் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இம்மாதத்தில்மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு

ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும்

ஆடிஅமாவாஸை மற்றும்

ஆறுகளில் புனல் பொங்கிவந்து

ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான

ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன

தமிழ் மாதங்கள் பனிரெண்டில்

ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு.

ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம்.

தை மாதம் வரை இவை தொடரும்.

"ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர்.

மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான்.

அதேபோல் தை மாதத்திற்குப்

பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது.

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம்.

தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர்.

ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில்

சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும்.

பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.

உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே.

வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக

ஆடி மாதம் விளங்குகிறது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
அன்னை காமாட்சி தேவி,
பரமசிவனை நோக்கித்தவமிருந்து, ஈசனை அடையும்
பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான்.
தேவியின் திருவுருவங்களில் ஒன்றான
வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன்
"வாராஹிநவராத்திரி'\இம்மாதத்தில்தானகொண்டாடப்படுகிறது. .
ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும்
திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.
காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல்
என்றஊரஅமர்க்களப்படும்
படவேடு ரேணுகாம்பாள்,
திருவேற்காடு கருமாரியம்மன்,
புன்னை நல்லூர் மாரியம்மன்,
சமயபுரம் மாரியம்மன் போன்ற
பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும்.
ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி,
கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை
துளசி அம்மனை வழிபட
நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும்.
வளமான வாழ்க்கை அமையும்.

ஆடிப்பூரம்!

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம்
"ஆடிப்பூரம்' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் .
ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும்,
சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும்
பரிவர்த்தனை பெற்றிருந்தபோது,
நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம்
கூடிய சனிக் கிழமையன்று
துளசி மாடத்தினருகில்
பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.
காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

ஆடிப்பூரத் திருவிழா
ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும்,
மற்றும் பல திருமால் ஆலயங்களிலும்
விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
உலக மாதாவாகிய பார்வதி தேவி
ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.
அன்னையை விரதமிருந்து தரிசித்தால்
அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

புதுமணத் தம்பதிக்கு சீர்!

இத்தகைய பெருமைகள் மிக்க ஆடி மாதத்தின்
முதல் நாளே பண்டிகை தினம் தான். "ஆடிப் பண்டிகை'
இத்திருநாளில் புதுமணத் தம்பதிகளுக்கு சீர் செய்து
அவர்களைப் பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்துவந்து
விருந்து கொடுப்பார்கள்.
பிறகு கணவரை மட்டும்அனுப்பிவிட்டு
பெண்ணை மாதம் முழுவதும்
தங்க வைத்துக் கொள்வார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில்
குழந்தை பிறக்கும்;
தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம்
கஷ்டத்தைத் தரும் என்பதால்
இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்
"ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி'
என்ற பழமொழிக்கேற்ப மாப்பிள்ளைக்கு
தேங்காய்ப் பால் கொடுத்து உபசரிப்பார்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக