வியாழன், நவம்பர் 17, 2011

இந்து தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்


இணையத்தில் இந்த சுவாரசியமான தகவல்களை படித்தேன்.
மிகவும் அருமையான , நாம் அறிந்து கொள்ள வேண்டியவைதான்.
ஆனால், இன்றைய கால கட்டத்தில் , இதில் கூறியுள்ளபடி நடப்பது என்பது  சாத்தியமா?
என்பதுதான் மிகப் பெரிய கேள்விக் குறி.
பல விசியங்கள் சாத்தியமே;
சில முயன்றால் முடியும்;
சில முடியவே முடியாது என்பது என் கருத்து,
படித்துப் பாருங்கள்.

பொங்கல்
இந்து மதம் இயற்கை மதம்.
தைப் பொங்கல் என்பது பூமியில் விளைந்த இயற்கையான காய்கறிகள் ,
நவதானியங்கள் , பொங்கல் ,  கரும்பு மற்றும் பலவற்றை
சூரியபகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
சூரியன் என்பது இயற்கை.
அதனால் இயற்கையில் விளைந்த பொருள்களை வழிபடுபது என்பது பொருள்.

தீபாவளி
தீபாவளி என்பது நரகாசூரனை வதம் செய்வது.
 அதாவது கெட்ட சக்தியினை அழிப்பது என்பது தான் உண்மை.
அதைப்போல் கெட்ட எண்ணங்களை அகற்றி நன்மை வர வேண்டும்
என்று மனதில் நினைத்து தீபத்தை ஒளியேற்றி வணங்குவது ஆகும்.

ஆயுதப்பூஜை
செய்யும் தொழில் நல்ல முறையில் இருக்கனும் என்று நினைத்து
நேர்மையான முறையில் தொழில் செய்யனும் என்பது தான் பொருள். 
நாம் அவ்வாறு வேலை செய்யும் இயந்திரங்கள் ,
மற்றும் பொருள்களை வைத்து வழிபடுவது தான் ஆயுதப்பூஜை ஆகும்.

கார்த்திகை தீபம்
“ கார்த்திகைப் பொழுது கால் பொழுது “ எனறு முன்னோர்கள் சொல்வார்கள். 
ஏனென்றால் இதன் விளக்கத்தினை கீழே பார்க்கலாம்.
 சூரியன் ஐப்பசி மாதம் நீசமாகி கார்த்திகை மாதம் பிரபலிக்கிறார்
என்பது ஜோதிடத்தின் உண்மை.
இதனால் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி சூரியனை வரவேற்கின்றோம்
என்பது தான் உலக உண்மை ஆகும்.- 

ஸ்ரீ கிருஷ்ணா கால்ரேகை ஜோதிடம்
காலின் பெருவிரல் ரேகையை வைத்து கணித்து சொல்லப்படும்.
இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு தௌளத்தெளிவாக தெரியும். 
திருமணவாழ்க்கை தடை வாழ்க்கையின் பிரச்சனைகள் போன்ற
தீர்க்கமுடியாத பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
இந்த கால்ரேகை ஜோதிடம் கிருஷ்ணருடைய பாதத்தை மையமாக வைத்து சொல்லப்படும்.



கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது


தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு.

தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்.

தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.


ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி

முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்

கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.


சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்

அவர்களுக்கு உதவ வேண்டும்.


அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்


பசு, தேர் , நெய்குடம் , அரசு , வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு

இவைகள் எதிரில் குறுக்கிட்டால் , வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.


குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது.

ஒரு கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.

துணியில்லாமல் குளிக்கக்கூடாது.

சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.


கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது.

மழை பெய்யும் போது ஓடக்கூடாது 

தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.


நெருப்பை வாயால் ஊதக்கூடாது


மலஜலம் கழிக்கும் போது ,

இரவில் தெற்கு முகமாகவும் ,

மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும்.

கிழக்கு , மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது.


பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,

தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டாலோ ,

 புண்ய நதியில் 3 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.


குழந்தையில்லாதவன், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன் ,

 திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் ,

 மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.


சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை

வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.


சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.


பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது.

கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும்.

திருமணத்திலும், பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்.


கோவணமின்றி , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.


இருட்டில் சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,

சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .


சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது

வெற்றிலையில் நுனியில் பாவமும், மூலையில் நோயும் ,

நரம்பில் புததிக்குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விடவேண்டும்.


சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ ,

வெறும் பாக்கை மட்டும் போடக் கூடாது.

வெற்றிலையின் பின்பக்கம்தான் சுண்ணாம்பு தடவவேண்டும்.


மனைவி கணவனுக்கு வெற்றலை மடித்துக் கொடுக்கலாமே தவிர ,

 கணவன் மனைவிக்கும் , மகன் தாய்க்கும் , பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது.


குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது

 வெறுங்கையுடன் செல்லக்கூடாது.


ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது


தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும்

.இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது.


இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது


வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.


தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.


வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது


மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,

உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.


பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.


ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.


வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது

.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.


ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது


சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது


பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,

கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.


பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல்

இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்

 அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.


அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் ,

முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.


ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,

மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை

 இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,

அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.


பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்

 இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.


பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.


பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.


பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி

 சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு

புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.


தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.

பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.

தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.


அண்ணன் - தம்பி , அக்காள் - தங்கை , ஆசிரியர் - மாணவர் , கணவன் - மனைவி,

 குழந்தை- தாய் , பசுவும் - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது.


நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.


வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.


கையால் மோரைக் குழப்பக்கூடாது.


தாம்பத்ய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர

மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம உறுப்பையும்

பிற பெண்களுடையதையும் பார்க்கக்கூடாது.


நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது

மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை


பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு எழவேண்டும்.


சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து , முற்றத்தில் பெருக்கி

சாணந் தெளித்துகோலமிட வேண்டும்.


கோலமிடுவதற்கு , மஞ்சள் கலந்த அரிசிமாவு , பச்சிலைப்பொடி ,

 குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்.


சுபகாரியங்களுக்கு ஒரு கோடும் ,

அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.


பூஜையறை , சமையலறை , சாப்பிடுமிடத்தை நாள் தோறும் கழுவுதல் வேண்டும்


அமாவசை , பௌர்ணமி , கார்த்திகை , மாதப்பிறப்பு ,

 வெள்ளிக்கிழமை , பிறவிசேஷதினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்.


மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.


தாமிரப் பாத்திரங்களை புளியினாலும் ,

வெங்கலம், பித்தளைப் பாத்திரங்களை சாம்பலாலும்

 ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும் ,

 எவர்சில்வர் , பீங்கான் பாத்திரத்தை அரப்புப் பொடியினாலும் சுத்தப்படுத்த வேண்டும்.


குளித்த பினபு தான் குடிநீர் எடுக்க வேண்டும்.


தண்ணீர்குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும்.

 தோளிலும், தலையிலும் சுமக்கக்கூடாது.


சூரிய அஸ்தமன சமயமான மாலை நேரங்களில் ,

கைகால் கழுவி விளக்கேற்றி வைக்க வேண்டும்.


உரல் , அம்மி , முறம் , வாசற்படி , உலக்கை இவற்றின் மீது உட்காரக்கூடாது.


வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்டாது.

 4 வது நாளில் கணவனை வணங்கிவிட்டு ,

5ம் நாள் குளித்து விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம். 

அன்று கணவனோடு சேர்வது சிறப்பு



வாழை, புன்னை, மா, பலா இலைகள் சிறந்ததாயினும்,

உணவு படைப்பதற்கு வாழையிலையே மிகச்சிறந்தது.


வாழையிலையில் அடியில் சிறிது அறிந்துரிட்டு,

கழுவிவிட்டு இலையை போட வேண்டும்.

சாப்பிடுபவர்களின் வலது கைப்பக்கம் இலையின் அடிப்பாகமும்,

இடக்கைப்பக்கம் நுனிப்பாகம் இருக்கும்படி போடவேண்டும்.


எதையும் கையால் படைக்கக்கூடாது.

அப்பளம் போன்றவற்றை கையை கழுவிவிட்டு போட வேண்டும்.


சோறு, கறி முதலியவற்றை மண்பாண்டத்தில் வைத்தோ அல்லது

அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.


வீட்டுக்கு வந்த புது மருமகளையும், நோயாளிகளையும்

கர்ப்பிணிப் பெண்களையும். குழந்தைகளையும்

வயதானவர்களையும் முதலில் சாப்பிடச் சொல்ல வேண்டும்.


சாப்பிடும் போது நீர் குடிக்கக்கூடாது.உண்ட பின்பு குடிக்க வேண்டும்.


உணவு அருந்திய பின் குளிக்கக் கூடாது.

 மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை கழித்து(2மணி நேரம்) குளிக்கலாம்.


ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.


தலையில் சூடிய மலரை தானே எடுத்தெறிய கூடாது.


பெண்கள் விரதமிருக்க வேண்டும்.

கணவனுடைய அனுமதி பெற்றே விரதமிருக்க வேண்டும்.

தீபம் ஏற்றும் நேரம்

தீபம் ஏற்றும் நேரம் : பிரம்ம முகூர்த்தம்

காலையில் உஷத் காலத்திலும் ,

 மாலையிலும் சூரிய அஸ்தமனத்தக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்

எவர்சில்வர் விளக்கு ஆகாது.

2 திரியை சேர்த்த முறுக்கி, ஏற்றுவது உத்தமம்.

தீபத்தை கிழக்கு திசையிலும் ,

 மேற்குத்திசை நோக்கயும், வடக்கு திசை நோக்கியும் தீப மேற்ற வேண்டும்.

தெற்கு எமனுடைய திசையாதலால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.

ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக