|
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது |
| தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு.
தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்.
தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். |
| ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி
முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும். |
| சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்
அவர்களுக்கு உதவ வேண்டும். |
| அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும் |
| பசு, தேர் , நெய்குடம் , அரசு , வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு
இவைகள் எதிரில் குறுக்கிட்டால் , வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். |
| குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது.
ஒரு கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.
துணியில்லாமல் குளிக்கக்கூடாது.
சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது. |
| கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது.
மழை பெய்யும் போது ஓடக்கூடாது
தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது. |
| நெருப்பை வாயால் ஊதக்கூடாது |
| மலஜலம் கழிக்கும் போது ,
இரவில் தெற்கு முகமாகவும் ,
மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும்.
கிழக்கு , மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது. |
| பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,
தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டாலோ ,
புண்ய நதியில் 3 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும். |
| குழந்தையில்லாதவன், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன் ,
திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் ,
மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது. |
| சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை
வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும். |
| சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது. |
| பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது.
கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும்.
திருமணத்திலும், பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். |
| கோவணமின்றி , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது. |
| இருட்டில் சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,
சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் . |
| சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது
வெற்றிலையில் நுனியில் பாவமும், மூலையில் நோயும் ,
நரம்பில் புததிக்குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விடவேண்டும். |
| சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ ,
வெறும் பாக்கை மட்டும் போடக் கூடாது.
வெற்றிலையின் பின்பக்கம்தான் சுண்ணாம்பு தடவவேண்டும். |
| மனைவி கணவனுக்கு வெற்றலை மடித்துக் கொடுக்கலாமே தவிர ,
கணவன் மனைவிக்கும் , மகன் தாய்க்கும் , பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது. |
| குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது
வெறுங்கையுடன் செல்லக்கூடாது. |
| ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது |
| தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும்
.இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது. |
| இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது |
| வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். |
| தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது. |
| வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது |
| மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,
உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது. |
| பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது. |
| ஈரக்காலுடன் படுக்கக்கூடாது. |
| வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது
.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது. |
| ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது |
| சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது |
| பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,
கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது. |
| பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல்
இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்
அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும். |
| அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் ,
முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது. |
| ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,
மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை
இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,
அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது. |
| பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்
இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. |
| பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது. |
| பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும். |
| பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி
சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு
புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும். |
| தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது. |
| பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது. |
| தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது. |
| அண்ணன் - தம்பி , அக்காள் - தங்கை , ஆசிரியர் - மாணவர் , கணவன் - மனைவி,
குழந்தை- தாய் , பசுவும் - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது. |
| நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. |
| வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும். |
| கையால் மோரைக் குழப்பக்கூடாது. |
| தாம்பத்ய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர
மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம உறுப்பையும்
பிற பெண்களுடையதையும் பார்க்கக்கூடாது. |
| நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக