செவ்வாய், நவம்பர் 01, 2011

முருகனின் வீடுகள்



    • அறுபடை வீடு

    • திருச்செந்தூர் 
    • அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு 
    • வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
    • திருப்பரங்குன்றம்
    •  சூரபத்மனை போரில் வென்ற பின் 
    • இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
    • பழநி 
    •  மாங்கனிக்காக தமையன்விநாயகரோடு போட்டியிட்டு 
    • தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
    •   சுவாமி மலை
    • தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி 
    • தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
    •   திருத்தணி.
    • சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து,
    •  குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
    • பழமுதிர்ச்சோலை
    • ஔவைக்கு பழம் உதிர்த்து,
    •  வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது
பழநி 

  பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும்

ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால்தன்

 பெற்றோர்களிடம் கோபம்கொண்டு 

முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும்இடமே பழநி

பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை

 நவபாஷானத்தால் ஆனது.

அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும்

 பால்பஞ்சாமிர்தம்விபூதிஆகியவற்றை 

உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.   

  




திருச்செந்தூர் 

கடல் அலை 'ஓம்என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 

'அலைவாய்என்னும்திருச்செந்தூர் முருகன்

சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும்.

சூரபத்மன் தேவர்களையும்இந்திரனையும்

அவன் மனைவியையும் சிறை செய்துகொடுமை செய்தான்

அவர்களைக் காப்பாற்ற முருகன் 

சிவபெருமானின்நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார்

சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமேதிருச்செந்தூர்

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும்.

அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது 

விரதம் இருந்து முருகனைவழிபடுகின்றனர்

போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க

 முருகன் தன்தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார்

அதில் ஒருபாதி மயில் ஆகிறது.

மற்றொரு பாதி சேவலாகிறது

மயிலைத் தன் வாகனமாகவும்

சேவலைத் தன்கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.   











திருப்பரங்குன்றம்
      
தேவேந்திரனையும்தேவர்களையும் சிறை மீட்டதற்கு 

நன்றிக்கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை 

முருகனுக்குத்திருமணம் செய்துகொடுக்கிறான்

முருகனுக்கும்தெய்வானைக்கும்திருமணம் 

நடந்த இடம் திருப்பரங்குன்றம்

முருகனுக்கும்சூரபத்மனுக்கும் போர் முடிந்து 

முருகன் போரில் வெற்றி பெற்றமறுநாள் 

இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.    











 சுவாமி மலை

 தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை

பிரணவ மந்திரத்திற்குப் பொருள்தெரியாத பிரம்மனை 

முருகன் சிறையில் அடைக்கிறார்

இதைக் கேள்வியுற்றசிவபெருமான்

எனக்கும்பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத 

பிரணவமந்திரத்தின்பொருள் 

உனக்குத் தெரியுமாஎன்று கேட்கிறார்.  

அதன்படி உபதேசிப்பவன் குரு,

கேட்பவன் சீடன் என்ற முறையில் 

முருகன் ஆசனத்தில் அமர

அவர் கீழ் சிவன்அமர்ந்து 

தன் கரத்தால் வாய் பொத்தி 

உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.    


 







திருத்தணி.
      
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் 

காதல் மணம்புரிந்துகொண்ட இடமே திருத்தணி.

 வள்ளியின் தந்தை நம்பிராஜன்முருகனுக்கு 

வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து,

முருகனுடன் போரிட்டு மடிகிறான்.

 பின் முருகன் வள்ளியைத்திருமணம் செய்து கொள்கிறான்

முருகன் போரிட்ட கோபம் தணியநின்ற மலையே 

தணிகை மலை ஆகும்

அதுவே திருத்தணி என்றுபோற்றப்படுகிறது.    












பழமுதிர்ச்சோலை
      

 நக்கீரர்

'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலைகிழவோனே'

 என்று முருகனின் ஆறாவது படைவீடாகப்

பழமுதிர்ச்சோலையைக் கூறித் 

திருமுருகாற்றுப் படையை நிறைவுசெய்கிறார்

குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத்தோன்றி 

நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம்பழமுதிர்ச்சோலையாகும்.    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக