அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான்.
அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள்
என்று ஏற்றுக்கொண்டனர். .
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை
எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று
விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று
ஜோதிப்பிழம்பாக காட்டிச்சியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
ஒருசமயம் பிரும்மா, "நான் தானே
எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறேன்.
நான் சிருஷ்டி செய்யாவிட்டால்
இந்த பிரும்மாண்டமான உலகமே இருக்காது,
அதனால் நான் தான் பெரியவன்" என்று கர்வம் பிடித்து
எதற்கும் மஹாவிஷ்ணுவிடம் இதைப் பற்றிக் கேட்போம்
என்று விஷ்ணுவிடம் சென்றார்,
விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார்.
பிரும்மாவைப் பார்த்து வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டார்,
பிரும்மா விஷயத்தைச் சொல்லி, "இப்போது சொல்,
நான் தானே, படைக்கிறேன்,
நான் தானே உயர்ந்தவன்?" என்றார்.
அதற்கு விஷ்ணு பகவான், "ஒ பிரும்மா, படைத்தால் மட்டும் போதாது,
காக்கவும் வேண்டும்.
நான் எல்லோரையும் காக்கிறேன்,
அதனால் நான் தான் பெரியவன்." என்றார்.
வாக்குவாதம் அதிகமாக,
இருவரும் சிவனிடம் கேட்போம் என்று முடிவு செய்து
சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தனர்,
இரு தரப்பிலிருந்தும் எல்லாம் கேட்ட பிறகு ஒரு பரீட்சை வைத்தார்.
"யார் என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து
என்னிடம் சொல்லுகிறாரோ அவர்தான் பெரியவர் உயர்ந்தவர்" என்றார்.
இதைப் பற்றி அறிய இருவருமே ஆவலாக இருந்தனர்.
மிகவும் எளிதான காரியம் என்று எண்ணி ஒத்துக் கொண்டனர்.
அப்போது சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய்
லிங்க வடிவில் தோன்றினார்.
பிரும்மா அன்னப் பறவையாக மாறினார்.
விஷ்ணு வராக, அதாவது பன்றி உருவம் எடுத்துக் கொண்டார்.
அன்னப் பறவையான பிரும்மா ஆகாயத்தில்
உயரப் பறந்து முடியைத் தேடித் தேடி அலைந்தார்,
பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்துக் களைத்துப் போனார்.
அப்போது அங்கு சிவபெருமானின் சடாமுடியிலிருந்து
கீழே விழுந்துகொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பார்த்தார்.
"தாழம்பூவே, எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும்,
நான் சிவனது முடியைப் பார்த்ததாக
ஒரு சின்னப் பொய் சொல்ல வேண்டும்." என்றார்.
தாழம்பூவும் சரி என்று ஒத்துக் கொண்டது.
விஷ்ணுவோ பன்றி ரூபத்தில் பூமியைக் குடைந்து
மிகவும் ஆழமாகச் சென்று அடியைத் தேடினார்.
அவருக்கும் அடி தென்படவில்லை.
இனித் தேட முடியாது என்று களைத்து
அவரும் திரும்பி வந்து விட்டார்.
இருவரும் சிவனிடம் திரும்பி வந்தனர்.
விஷ்னு தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
காக்கவும் வேண்டும்.
நான் எல்லோரையும் காக்கிறேன்,
அதனால் நான் தான் பெரியவன்." என்றார்.
வாக்குவாதம் அதிகமாக,
இருவரும் சிவனிடம் கேட்போம் என்று முடிவு செய்து
சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தனர்,
இரு தரப்பிலிருந்தும் எல்லாம் கேட்ட பிறகு ஒரு பரீட்சை வைத்தார்.
"யார் என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து
என்னிடம் சொல்லுகிறாரோ அவர்தான் பெரியவர் உயர்ந்தவர்" என்றார்.
இதைப் பற்றி அறிய இருவருமே ஆவலாக இருந்தனர்.
மிகவும் எளிதான காரியம் என்று எண்ணி ஒத்துக் கொண்டனர்.
அப்போது சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய்
லிங்க வடிவில் தோன்றினார்.
பிரும்மா அன்னப் பறவையாக மாறினார்.
விஷ்ணு வராக, அதாவது பன்றி உருவம் எடுத்துக் கொண்டார்.
அன்னப் பறவையான பிரும்மா ஆகாயத்தில்
உயரப் பறந்து முடியைத் தேடித் தேடி அலைந்தார்,
பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்துக் களைத்துப் போனார்.
அப்போது அங்கு சிவபெருமானின் சடாமுடியிலிருந்து
கீழே விழுந்துகொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பார்த்தார்.
"தாழம்பூவே, எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும்,
நான் சிவனது முடியைப் பார்த்ததாக
ஒரு சின்னப் பொய் சொல்ல வேண்டும்." என்றார்.
தாழம்பூவும் சரி என்று ஒத்துக் கொண்டது.
விஷ்ணுவோ பன்றி ரூபத்தில் பூமியைக் குடைந்து
மிகவும் ஆழமாகச் சென்று அடியைத் தேடினார்.
அவருக்கும் அடி தென்படவில்லை.
இனித் தேட முடியாது என்று களைத்து
அவரும் திரும்பி வந்து விட்டார்.
இருவரும் சிவனிடம் திரும்பி வந்தனர்.
விஷ்னு தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் பிரம்மா சிவன் முடியைக் கண்டதாகப் பொய்யுரைக்க,
தாழம்பூவும் பொய்சாட்சி சொன்னது.
அபோது சிவன் தன் உன்மையான ரூபத்தைச்
சூரிய சந்தரனுடன், மூன்று கண்களுடன்,
அதாவது நெற்றியில் ஒரு கண்ணுடன்
திருசூலம் ஏந்தி தரிசனம் தந்தார். "
நாம் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற
மூன்று காரியங்களுக்காக என்னால் உண்டாக்கப்பட்டோம்.
நாம் மூவரும் உலகத்திற்கு முக்கியமானவர்கள் தான்." என்றார்.
பின்னர் பொய் சொன்னதால்
பிரும்மாவுக்கு ஒரு கோவிலும் இருக்கக்கூடாது என்றும்
தாழம்பூவை சிவபூஜைக்கு சேர்ப்பதில்லை
என்றும் கோபத்தில் கூறினார்.
அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது.
அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி
எனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது.
ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக
ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம்.
கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு
கடைசி நாள் வரை தினமும் மாலையில்
வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி
வைத்துக் கொண்டாடுவர்.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள்
துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது
தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில்
கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான்
திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.
துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது
தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில்
கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான்
திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.
இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய
ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி
ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க
அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள்
பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய
ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி
ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க
அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள்
பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.
சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு
எழுந்தருளி உமாதேவியார்
அக்குழந்தைகளை வாரி அணைக்க,
ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்-
தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.
அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர்
சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.
எழுந்தருளி உமாதேவியார்
அக்குழந்தைகளை வாரி அணைக்க,
ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்-
தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.
அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர்
சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.
சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி"
உங்களுக்கு மங்களம் உண்டாகுக!
உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு
கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.
உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளி
ல் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு
அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று
திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது
தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும்,
அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் உங்களுக்கு மங்களம் உண்டாகுக!
உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு
கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.
உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளி
ல் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு
அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று
திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது
தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும்,
அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர்.
அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும்
அறம், பொருள். இன்பம், வீடு என்ற
தத்துவங்களை உணர்துவது போலாகும்.
பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக்
கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.
ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது
தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும்
அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக்
கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி
விரதம் இருந்து பெருமானின் பேரருளால்
தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும்
அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக்
கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி
விரதம் இருந்து பெருமானின் பேரருளால்
தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:
கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா
ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.
இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால்
இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து
எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள்.
இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர்.
கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து
நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார்.
திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள்.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும்
பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய
திருக்கார்த்திகை நாளில்
கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும்
சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
இத் திருநாள் இந்த வருடம் 08.12.2011--வியாழக் கிழமை
அன்று அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.
இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர்.
கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து
நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார்.
திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள்.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும்
பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய
திருக்கார்த்திகை நாளில்
கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும்
சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
இத் திருநாள் இந்த வருடம் 08.12.2011--வியாழக் கிழமை
அன்று அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.
கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில்
கார்த்திகை நட்சத்திரம் வருவதால்
இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது.
கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி
எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது.
இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில்
சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது.
அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய்,
அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும்.
[அருணம், சோணம் - சிகப்பு நிறம்]
கார்த்திகை நட்சத்திரம் வருவதால்
இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது.
கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி
எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது.
இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில்
சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது.
அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய்,
அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும்.
[அருணம், சோணம் - சிகப்பு நிறம்]
"
ஆடிப்பாடி அண்ணாமலை தொழ
ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள்.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான
புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.
ஆடிப்பாடி அண்ணாமலை தொழ
ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள்.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான
புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.
திருவண்ணாமலை புண்ணிய பூமி.
ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள்,
தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி.
தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம்
அருள் வழங்கும் மலை.
ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி
அனைவருக்கும் முக்தி தரும் மலை.
உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம்,
பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.
ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள்,
தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி.
தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம்
அருள் வழங்கும் மலை.
ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி
அனைவருக்கும் முக்தி தரும் மலை.
உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம்,
பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.
மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில்
இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும்.
ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும்.
இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள்.
அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும்
எழுந்தருளுவதாக ஐதீகம்.
இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால்
பல நாட்கள் ஒளிவீசும்.
இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும்
செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்.
ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை
ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.
பல நாட்கள் ஒளிவீசும்.
இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும்
செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்.
ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை
ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில்
கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது,
உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி
மெய்ஞான ஒளியைப் பரப்பும்
சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்
கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது,
உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி
மெய்ஞான ஒளியைப் பரப்பும்
சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக