ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு
வாய்ந்தது.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியைதான் அட்சய
திருதியை எனப்படுகிறது.
இந்த ஆண்டில் அட்சய திருதியை மே 6 -2011 , சித்திரை மாதம் 23- ம் நாள்
வெள்ளிக் கிழமை 'வைசாக சுத்த திருதியை' திதி அன்று ரோகினி,
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் வருகிறது.
சுக்கிரனின் ஆட்சி ராசியான ரிஷபத்தில் நிகழ்கிறது.
வைசாக சுத்த திரிதியை என்பது சந்திர மாத அடிப்படையில் வரும்
வைகாசி மாத வளர்பிறை மூன்றாம் நாள்
இந்த வருடம் அட்சய திரிதியை இரண்டு நாட்கள் [05-05-2011--06-05-2011]
உள்ளது.
வாக்கிய பஞ்சாங்கம்படி -அட்சய திரிதியை துவக்கம்
மே 5 வியாழன் மாலை 3.05 மணி முதல்
அட்சய திரிதியை முடிவு--
மே 6 வெள்ளிக்கிழமை மாலை 3.18 மணி வரை
திருக்கணித பஞ்சாங்கம்படி --- அட்சய திரிதியை துவக்கம்
மே 5வியாழன் மாலை 3.15 மணி முதல்
அட்சய திரிதியை முடிவு-
மே 6 வெள்ளிக்கிழமை மாலை 4.06 மணி வரை
தான, தர்மங்கள் செய்த பிறகு நகை வாங்குவது சிறப்பு.
நல்ல ஹோரை, நல்ல இலக்னத்தில், இராகு காலம், எம கண்டம் நீங்கிய
காலத்தில் நகை வாங்குதல், அணிதல் நல்லது.
அன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்-
சிவன், விஷ்ணு, மகாலக்ஷ்மி
இந்திரன், குபேரன், சங்கநிதி, பதுமநிதி, எமன்
வாசலில் சங்கு, தாமரைக் கோலம் போடுவது,
மாலையில் வாசலில் விளக்கு ஏற்றுதல் நல்லது.
அட்சயம் என்றால் வளருதல்,
அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்துகொண்டே இருத்தல்.
அட்சய பாத்திரம் என்பதுபோல. அன்றைய தினம் செய்கிற எந்த காரியமும்
வளர்ந்துகொண்டே இருக்கும்
வெற்றிகரமாக நடந்து முடியும் என்பது வேத வாக்கு.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பர் குலேசன் வறுமையில்
வாடுகிறார்.
உதவிகள் கேட்டு வரலாம் என்று அவரை சந்திக்க ஒரு பிடி
அவலை மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார்.
அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பரமாத்மா அவர் அன்போடு
கொண்டுவந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்துப் போடுகிறார்.
நட்பு, அன்பு கலந்த அவலின் ருசியில் மகிழ்ந்துபோன கிருஷ்ணன்,
“அட்சயம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
இன்னொரு கவளம் அவல் தின்னவிடாமல் கிருஷ்ணனை தடுக்கிறாள்
லட்சுமியின் அம்சமான ருக்மணி. காரணம் கேட்கிறார் கிருஷ்ணன்.
“அன்புடன் கொடுத்த அவலை ஒரு பிடி தின்றதற்கே குசேலனின் குடிசை
வீட்டை மாட மாளிகையாக மாற்றி சகல ஐஸ்வர்யங்களையும்
வழங்கிவிட்டீர்கள். இனியும் ஒரு பிடி தின்றால் லட்சுமி தேவியான நானே
குலேசன் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான்” என்கிறாள்.
குலேசன் கேட்காமலேயே அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும்
செல்வச் செழிப்பையும் கொடுத்து அருளியவன் கண்ணன்.
வீடு திரும்பிய பிறகுதான் இவை அனைத்தும் குசேலனுக்கு
தெரியவருகிறது. கண்ணனின் அன்பை நினைத்து வியக்கிறார்.
அவருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை
கவுரவர்கள் சபையில் திரவுபதியின் துகிலுரியப்பட்டபோது ஆடைகளாக
அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச
புராணம்.
அப்போதும் “அட்சய” என்று சொல்லியே ஆடைகளை பெருக்கெடுக்கச்
செய்துள்ளார் கண்ணன்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள்,
தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்தது,
திரவுபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்த நாள்,
சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள்,
ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள்,
சங்க நிதி, பத்ம நிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள்,
மகாவிஷ்ணுவின் வல மார்பினில் மகாலட்சுமி இடம்பிடித்த நாள் என
அட்சய திருதியைக்கு பல்வேறு பெருமைகள் கூறப்படுகின்றன.
ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கும்,
வைகுண்டத்தில் மகாலட்சுமியாக,
பாற்கடலில் ஸ்ரீதேவியாக,
இந்திரனுடைய இடத்தில் சுவர்க்க லட்சுமியாக,
அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாக,
குடும்பத்தில் கிரக லட்சுமியாக,
வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாக,
பசுக்களிடத்தில் காமதேனுவாக
சகல யோகங்களை வாரி வழங்கும் ஆதார சக்தியான லட்சுமி தேவிக்கு
உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது.
இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.
வேறு என்ன செய்யலாம்?
தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில்
வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்து
படுப்பதால் வியாதிகள் தீரும்.
கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின்
அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி, பாலாரிஷ்ட தோஷங்கள்
கழியும்.
சகல தடங்கல், தடைகள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளையும் அழித்து வளமும்
நலமும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை வீட்டில் செய்யலாம்.
வாழ்வு வளம் பெற தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.
ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும்,
தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.
இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும்.
அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன்
காத்தருளுவார்.
பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ
வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக