தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம்.
திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது.
தாலி அதை உறுதிப்படுத்துகிறது.
அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது
இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது.
அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.
அவை-
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.
இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில்
மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது.
தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும்
ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும்.
தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின்
முக்கிய குறியீடு.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.
திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது.
தாலி அதை உறுதிப்படுத்துகிறது.
அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது
இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது.
அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.
அவை-
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.
இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில்
மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது.
தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும்
ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும்.
தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின்
முக்கிய குறியீடு.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே
பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால்
இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.
தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.
பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.
பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.
ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில்
செய்வதால் அல்ல.
வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி
கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.
(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல்
வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள்.
மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.)
தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி
இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார்
முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம்
செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை
கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக
ஆய்வு சொல்கிறது.
சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி
என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்
தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில்
குறித்திருக்க வேண்டும்;
பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள்
பொன்னாகி இருக்கிறது.
(உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள்
கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.)
மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]
புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும்
இருந்து இருக்கிறது. .
பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால்
இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.
தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.
பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.
பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.
ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில்
செய்வதால் அல்ல.
வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி
கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.
(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல்
வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள்.
மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.)
தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி
இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார்
முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம்
செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை
கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக
ஆய்வு சொல்கிறது.
சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி
என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்
தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில்
குறித்திருக்க வேண்டும்;
பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள்
பொன்னாகி இருக்கிறது.
(உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள்
கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.)
மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]
புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும்
இருந்து இருக்கிறது. .
![]() |
அம்மன் தாலி |
![]() |
ஐம்பொன் தாலி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக