சனி, மே 07, 2011

சுப கிரகமான குரு பகவான்

இந்த வருட குருப் பெயர்ச்சி : பஞ்சாங்கப்படி - இந்த மே மாதம்   8 ஆம் தேதி
(08 .05 .2011 )  நள்ளிரவு    மீன ராசியிலிருந்து , மேஷ ராசிக்கு பெயர்ச்சி

ஆகிறார்.
சுமார் 12 மாதங்கள் அங்கு தங்கி - சிம்மம், துலாம், தனுசு ராசிகளை
பார்வையிட விருக்கிறார்.
09-05-2011  முதல்    17-05-2012 ௦ வரை

இந்த மூன்று ராசிகளுக்கும் , ராஜ யோகம் ஆரம்பிக்க விருக்கிறது..
இது நாள் வரை , சனியின் பார்வையில் இருந்ததால் முழுவதும் செயல்பட
முடியாமல் , இருந்த சுப கிரகமான குரு பகவான் - சுமார் ஆறு மாதங்கள் ,
சனிப் பெயர்ச்சி நடக்கும் காலம் வரை , அள்ளி அள்ளி கொடுக்க
விருக்கிறார் என்பது திண்ணம்.


குரு பெயர்ச்சியால் நற்பலன் பெரும் ராசிகள்-
மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம்
 
சுமாரான பலன் பெரும் ராசிகள்-
ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம்


கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்-

மேஷம்  கடகம், கன்னி


ஸ்ரீ குருகவான்

கிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார்.
பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.

குருவின் ஸ்தலம்: ஆலங்குடி.
தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான்.
 இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ.
தூரத்தில் உள்ளது.

இது ஒரு பரிகாரத் தலமாகும்.
இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி
வரவேண்டும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை.
குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது.
இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.

தனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள்.

குருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது.
பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை
கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.

பசும்பொன் வண்ணம் கொண்டவர்.
பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு.
மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.

வழிபடும் முறை:

குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும்.
குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.

வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு

செய்யலாம்.

வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.
 
அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை
 
வணங்கி ஆசிபெறலாம்.
 
 குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.
 
விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.
 
அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம்.
 
குரு பாமாலை:

குருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள்.
அவரது பூரண அருள் கிடைக்கும்.

பாமாலை:

வானவர் கரசே வளம் தரும் குருவே

காணா இன்பம் காணவைப் பவனே

பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்

உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்

சுண்டல் தான்யம் சொர்ணாபிஷேகமும்

கொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்

நாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்

இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்

உள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்

தலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்

நிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்

தவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்

சிவப்பிரியா நீ திருவருள் தருவாய்
குரு பகவானை மனதால் நினைத்து குருவுடைய காயத்திரி மந்திரமான

விருஷ த் வஜாய வித்மறே !

க்ருணி ஹஸ்தாய திமஹி !

தந்தோ குரு ப்ரசோயாத்.

என்பதையும் வியாழக்கிழமை தோறும் நினைத்து அவரை வணங்கிவர

வரக்கூடிய கெடுபலன்களைக் கலைந்த நற்பலன்களை நமக்கு நல்குவார்

என்பதில் ஐயமில்லை

குரு பகவானுக்கு மகன் செய்த உதவி:::
 
தேவர்களின் குருவாக  பிரஹஸ்பதியாகிய குருபகவான் திகழ்ந்துபோல
 
அசுரர்களுக்கு   சுக்கரன் குருவாக திகழ்நதார்.
 
 இறந்தவர்களை உயிர்த்தெழ வைக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை
 
சுக்கிரன் அறிந்து இருந்ததால் தேவாசுரப்போரில் மாண்ட அசுரர்களை
 
அந்த மந்திரத்தை பயன்படுத்தி சுக்கிரன் உயிர்த்தெழச் செய்தார்.
 
இதனால் அசுர பலம் கூடிக்கொண்டே போனது. இதனால் திகைத்துபோன
 
பிரஹஸ்பதி அந்த மந்திரத்தை சுக்கிரனமிடமிருந்து கற்றுவருவதற்காக 
 
தன் மகன் கசனை  அனுப்பி வைத்தார்.
 
கசன் தான் குரு பகவானின் மகன் என்று சிறிதும் காட்டி கொள்ளாமல்
 
சுக்கிரன் ஆசிரமத்தில் இருந்து வந்தான்.
 
எனினும் சீடர்களில் கசனை அடையாளம் கண்டு அவனை கொன்றனர்.
 
எனினும் சுக்கிரன் கசனை  தன்மந்திரத்தை பயன்படுத்தி காப்பாற்றினார்.
 
இவ்வாறு காப்பாற்றவே மூன்றாவது முறை கசனின் பிணத்தை எரித்து
 
அந்த சாம்பலை பானத்தில் கலந்து சுக்கிராச்சாரியாருக்கு
 
கொடுத்துவிட்டனர்.
 
அவரும் அதை மறந்து குடித்துவிட்டார்
 
சுக்கிரன் மகள் தேவயானி கசனை காதலித்து வந்தாள்.
 
எனவே கசனை காணாமல் தவித்த அவள் தன் தந்தையிடம்
 
முறையிட்டாள்.
 
கசனை வழக்கம் போல தன் சீடர்கள் கொன்றிருப்பார்கள் என்று நினைத்த
 
சுக்கிராச்சாரியார் அவனை உயிர்பெற வைப்பதற்காக மிருத சஞ்சீவினி
 
மந்திரத்தை பிரயோகித்தார்.
 
அவரது வயிற்றுக்குள் இருந்த கசன் உயிர்பெற்றான். கசனை வெளியே
 
கொண்டு வரவேண்டுமானால் சுக்கிரன் மாள வேண்டியிருக்கும்
 
எனவே அந்த மந்திரத்தை கசனிடம் உபதேசித்தார்.
 
கசன் சுக்கிரனின் வயிற்றைப் பிளந்தகொண்டு வெளியே வந்தார்.
 
கீழே இறந்து கிடந்த சுக்கிரனைப் மிருத சஞ்சீவினி மந்திரத்தை
 
பயன்படுத்தி உயிர்த்தெழச் செய்தான்.
 
பிறகு தன் தந்தையிடம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தை கூறினான்.
 
சிவனும் தட்சிணாமூர்த்தியும்::
 
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார்.
 
 
சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.
 
பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில்
 
பிரம்மதேவருடைய மகன்களான  சனகன், சனந்தன், சனாதனன்,  சனத்
 
குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு
 
கோரிக்கையை வைத்தனர்..
 
 "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை உபதேசிக்க வேண்டினர்.
 
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை
 
உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக
 
புராணங்கள் கூறுகின்றன.
 
குரு வழிபாடு தரும் பலன்கள்::
 
குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும்,
 
 அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும்
 
சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும்.
 
 மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும்,
 
 மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால்
 
நீங்கும் என்பது ஐதீகம்.
 
திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
 
எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம்
 
வணங்குவது நல்லது.
 
புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
 
எனவே  குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானடி
 
வழிபட்டு வருவது நல்லது.

     2011-2012   குரு பெயர்ச்சிப் பலன்கள் என்று எல்ல ராசிகளுக்கும்

பலன், சொல்லவேண்டிய பாடல், பரிகாரம் ---- இவை எல்லாம் என்னுடைய

 மற்றொரு இணையதளத்தில் கொடுத்து உள்ளேன்.


http://www.kanavugal-amirtham.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக