தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கிடைத்த
அமுதத்தை மும்மூர்த்திகளில் ஒருவரான விஸ்ணு, மோகினி
வடிவெடுத்து, தேவர்களிற்கு மட்டும் அமுதம் கிடைக்கும் விதமாக
அமுதத்தை பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார்.
இந்த சூழ்ச்சியினை யூகித்துக் கொண்ட சுவர்பானு என்ற அசுர
குமாரன் தானும் தேவர்கள் போல் உருமாறி மோகினியிடம் அமுதம்
பெற்று உண்டான்.
இதைக் கண்ட சூரியனும், சந்திரனும் மோகினிக்கு அசுரகுமாரனை
அடையாளம் காட்டினர்.
மோகினியும் தன் கையிலிருந்த அகப்பையினால் சுவர்பானுவின்
தலையில் அடிக்க தலை வேறு உடல் வேறு ஆகிப் போனது.
அமுதம் உண்ட காரணத்தினால் சுவர்பானுவிற்கு மரணம்
சம்பவிக்கவில்லை.
மாறாக தலையுள்ள பகுதியின் கீழ் பாம்பு உடல் வந்தது.
அசுர உடலின் மேல் ஐந்து தலை பாம்பின் தலை வந்தது.
இவர்கள் பிரம்ம தேவரை வேண்டித் தவமிருந்து நவக்கிரக அந்தஸ்து
பெற்று முறையே ராகு, கேது ஆனார்கள்.
பிரம்ம தேவரினால் ராகு கேதுக்களிற்கு அளிக்கப்பட்ட வரங்கள்:-
அறுபட்ட இரண்டு உடற்கூறுகளையும் சமஇடையில் வைத்து
என்றென்றும், எக்காலத்திலும், எக்காரணத்தினாலும் பிரிந்தோ அல்லது
இடம் விட்டு இடம் விலகிப் போகாமலும் இருக்கவும்,
சூரிய சந்திரர்களிற்கு நிகராக நவக்கிரக அந்தஸ்து பெற்று அவர்கள்
வலம் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது அப்பிரத்சணமாக
அவர்கள் கண்ணெதிரிலேயே சஞ்சாரம் செய்யவும்,
சிரசு உள்ள பகுதி ராகு என்றும்
உடல் உள்ள பகுதி கேது என்றும் பெயர் பெறவும்,
சொந்த வீடு மற்றும் ஆட்சி பலம் இல்லாவிட்டாலும் எந்த ராசி
வீட்டிலிருந்தாலும் அந்த வீட்டிற்கேற்ப உங்கள் செயலிருக்கவும்,
அனைத்து கிரகங்களின் இயல்புகளையும் கவர்ந்து, உங்கள்
இயல்பிற்கேற்ப பலன் தரக்கூடிய வல்லமையையும்,
நிழல் போல் தொடர்ந்து சென்று அவரவர் பாவ புண்ணியங்களிற்கு
ஏற்ப பலன் தரும் தன்மையையும், கிரகணங்கள் மூலம் பிடித்து
பழிவாங்குகின்றனர்.
அதாவது ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய சந்திரர்கள் சுமார்
ஒன்றரை மணிநேரம் சர்ப்ப தோசத்தினால் தங்கள் ஒளியை இழந்து
மங்கிப்போகின்றனர்.
சூரிய சந்திரர்களிற்கே இந்த நிலையென்றால் சாதாரண மனிதர்கள்
ஆகிய எமக்கு சர்ப்ப தோசத்தின் பாதிப்பு எப்படியிருக்கம் என்று
யோசித்துப் பாருங்கள்.
நவக்கிரகங்களில் ராகு கேதுக்கள் மட்டுமே அசுரர்கள்.
மற்றய ஏழுபேரும் தேவர்கள்.
எனவே இவர்கள் குணம் மிகக் கொடியதாக இருப்பது இயல்பே.
ஜோதிடத்தில் வக்கிர கதி அல்லது வக்கிரம் எனச் சொல்லப்படும்
அனேகமாக தீய பலனைத் தரக்கூடிய அமைப்பு இவர்களிற்கும் சூரிய
சந்திரர்களிற்கும் மட்டுமே கிடையாது.
சூரியனினால் ஏற்படும் அஸ்தங்க தோசம் இவர்களிற்கு கிடையாது.
அஸ்தங்க தோசம் அடையும் கிரகம் தனது செயலை செய்ய தனது
செயலை செய்ய முடியாத நிலையாகும்.
அஸ்தாங்கத தோஷம் இல்லை
நவக்கிரகங்களில் இயற்கையான ஒளியுடைய கிரகமான சூரிய
பகவானைச் சுற்றியே மற்ற கிரகங்கள் செல்லுகின்றன.
ராகு-கேது பகவான்களைத் தவிர மற்ற கிரகங்கள், சூரிய பகவானுக்கு
அருகில் செல்லும் போது அஸ்தாங்கத தோஷம் (கருகிக் போதல்)
அடைகிறார்கள். அதே நேரம் ராகு-கேது பகவான்கள் சூரிய பகவானுக்கு
அருகில் சென்றாலும் அஸ்தாங்கத தோஷம் அடைவதில்லை மாறாக
சூரிய பகவானையே பலமிழக்கச் செய்கின்றார்கள். அப்படி நேரும்
காலங்களில் கிரகணங்கள் உண்டாகின்றன.
இவற்றிலிருந்து ராகு கேதுக்களின் வலிமை என்ன என்பது
புரிந்திருக்கும்.
நலம் தரும் ராசிகள்
லக்னத்திற்கு கேந்திரங்களான, 3,6,11 ஆம் ராசிகளில் ஸ்ரீராகு-கேது
பகவான்கள் பலம் பெற்றவர்கள். இந்த ராசிகளில் இருக்கும் போது
அவர்கள் நற்பலன்களைச் செய்யக் கடமைப்பட்டவர்கள்.
கால சர்ப்ப யோகம்
ஒரு ஜாதகருக்கு, ராசி கட்டத்தில் அனைத்துக் கிரகங்களும் ஸ்ரீராகு-கேது
பகவான்களுக்கு இடையில் அமைந்து இருந்தால், அதற்கு கால சர்ப்ப
யோகம் என்று பெயர். இவர்கள் ஏழையாகப் பிறந்தாலும் 32 வயதுக்குப்
பிறகு அனைத்துச் சௌகர்யங்களையும் பெற்று, பெரும் சீமானாக
வாழ்வார்கள்.
அஷ்ட மஹா நாக யோகம்
ஸ்ரீராகு-கேது பகவான்கள், ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன்
இணைந்திருந்;தால் இத்தகைய யோகம் உண்டாகிறது. ராகு தசை, கேது
தசையில் சிறப்பான ராஜ யோகங்களை இது பெற்றுக் கொடுக்கும்.
சர்ப்ப தோஷம்
ஸ்ரீராகு-கேது பகவான்கள் லக்னத்திற்கு 1,2,4,5 ஆம் இடங்களில் இருந்தால்
சர்ப்ப தோஷம் உண்டு என அறியலாம். இதற்கான சர்ப்ப சாந்தியை
காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், ராமேஷ்வரம் திருப்புல்லாணி,
திருப்பாம்புரம், நாகர்கோயில், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களில்
செய்யலாம். அல்லது நாகப் பிதிஷ்டையின் மூலம் சர்ப்ப சாந்தி
செய்யலாம்.
பரிகாரம்
ஆதிசேஷனின் அவதாராமே இலக்குவன், அவரை தனது உடன் பிறப்பாகக்
கொண்டு சக்ரவர்த்தி திருமகனின் திருநாமமாகிய 'ராம" நாமத்தை
எப்போதும் ஜபித்து வந்தால் ராகு-கேது பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய
அசுப பலன்கள் அனைத்தும் தூள் தூளாகிவிடும். அதே போல் அஷ்ட
மஹா நாகங்களையும் அடக்கியாள வல்லவர் பரமேஸ்வரன். அவருடைய
திருநாமமாகிய 'நம சிவாய" மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து வந்தால்
இந்தப் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சுப பலன்கள் வளரும்! கெட்ட
பலன்கள் நாசமாகிவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக