திருநீறு (விபூதி)சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம்.
இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில்
வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் தத்துவத்தை
உணர்த்தி, நாமும் இதுபோல்தான்;
ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு
வாழவேண்டுமென உணர்த்துகிறது.
சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள்
நம்புகின்றனர்.
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது
பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
கல்பம்
அணுகல்பம்
உபகல்பம்
அகல்பம்
இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால்
சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.
முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து
எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.
மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.
நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.
அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர்,
அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம்,
குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.
புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது.
அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக
அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும்
வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,
அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு
தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை
தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
செய்துவிடலாம்.
மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும்
இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள்
ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும்.
அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும்
பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது.
தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள்.
சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும்,
அதில் நெருப்பு இல்லை.
ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள்.
அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.
இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில்
வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் தத்துவத்தை
உணர்த்தி, நாமும் இதுபோல்தான்;
ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு
வாழவேண்டுமென உணர்த்துகிறது.
சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள்
நம்புகின்றனர்.
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது
பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
கல்பம்
அணுகல்பம்
உபகல்பம்
அகல்பம்
கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரைஇலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால்
சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.
அணுகல்பம்
ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டுமுறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்தசாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து
எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால்எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
அணியும் காரணம்
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர்,திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.
மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.
நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.
அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர்,
அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம்,
குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.
புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது.
அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக
அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும்
வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,
அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு
தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை
தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
செய்துவிடலாம்.
மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும்
இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள்
ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும்.
அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும்
பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது.
தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள்.
சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும்,
அதில் நெருப்பு இல்லை.
ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள்.
அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக