கங்கா ஸ்நானம் ஆச்சா? ??????/
தீபாவளி அன்று ஒருவருக்கு ஒருவர் கேட்கும் கேள்வி.
அன்று ஆயில் பாத் தான் எடுப்போம்.
வாரத்தில் இரண்டு நாட்கள் நாம் செய்வதுதான்.
இருந்தாலும் , அதே ஆயில் பாத் தீபாவளி ஸ்பெஷல் ஆகிறது.
அதை ஏன் சாஸ்திர, சம்பிரதாயங்கள் கூறுகின்றன?
நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
தீபாவளி அன்று உள்ள திதிப் படி
அந்த நாள் முழுவதும் அதிகமான
பேட் வைப்ரேஷன்ஸ் [bad vibration ]
நம்மை சூழ்ந்து இருக்குமாம்.
அதற்கான தோஷ நிவர்த்தியாக
கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று
நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்த வேளையில்
[அதாவது அதிகாலை 3 மணியில் இருந்து
சூரிய உதயம் முன் வரை]
தலைக்கு [ofcourse oil bath ] குளிக்கும் போது
முப்பத்து முக்கோடி தேவர்களும்
தெய்வங்களைப் பூஜித்த அபிஷேக நீர்
அகிலம் முழுவதும் இருக்கும் நீரில்
கலந்து இருக்கும் என்பது ஐதீகம்.
அறிவியல் ரீதியாகவும்
தீபாவளி அன்று அதிகாலை
சூரிய உதயத்துக்கு முன் கடலின்
உப்புத் தண்ணீரில் குளித்தாலும்
உடல் சுத்தமாகிறது என்று
கடலில் குளிப்பதைக் கூட செய்கிறார்கள்.
அது உப்புக்கடல் ஆனாலும்
தீபாவளி அன்று அதிகாலையில்
உலகமெல்லாம் உள்ள தண்ணீர்
அந்த அளவுக்கு புனிதமாக இருக்கும் .
சிவனின் தலையிலிருக்கும் கங்கை நீருக்கு
இணையாக தீபாவளி அன்று அதிகாலை
பிரம்மமுகூர்த்தத்தில் குளிக்கும் நீரும்
கருதப்படுவதால் , தீபாவளி அன்று
எடுக்கும் ஆயில் பாத், ஸ்பெசல் ஆகி
கங்கா ஸ்நானம் என்ற புனிதம் பெறுகிறது.
தீபாவளி திதியின் போது உலவும்
பேட்வைப்ரேசன்ஸ் நம்மை விட்டு
விலகவே பட்டாசு வெடித்தும்,
மத்தாப்பு வெளிச்சங்களுடன்
தீபாவளி பண்டிகை ஒலி ஒளியுடன் கொண்டாடப் படுகிறது.
சிவனின் தலையிலிருக்கும் கங்கை நீருக்கு
இணையாக தீபாவளி அன்று அதிகாலை
பிரம்மமுகூர்த்தத்தில் குளிக்கும் நீரும்
கருதப்படுவதால் , தீபாவளி அன்று
எடுக்கும் ஆயில் பாத், ஸ்பெசல் ஆகி
கங்கா ஸ்நானம் என்ற புனிதம் பெறுகிறது.
தீபாவளி திதியின் போது உலவும்
பேட்வைப்ரேசன்ஸ் நம்மை விட்டு
விலகவே பட்டாசு வெடித்தும்,
மத்தாப்பு வெளிச்சங்களுடன்
தீபாவளி பண்டிகை ஒலி ஒளியுடன் கொண்டாடப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக