திங்கள், ஏப்ரல் 18, 2011

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்




திங்கள் ஏப்ரல் 18 - 2011

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு கள்ளழகர்

பச்சைப் பட்டுடன் மதுரை வைகை ஆற்றில் புதிய தங்கக்குதிரை

வாகனத்தில் திங்கள்கிழமை காலை இறங்கினார்.

ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம்

செய்தனர்.       
அழகர், சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வேடம் பூண்டு மதுரை வைகை

ஆற்றில் இறங்கும் வைபவம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்

அதற்காக  ஏப்ரல் 16 - அழகர் மலையில் இருந்து  கண்டாங்கி பட்டுடுத்தி

 மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்.
ஆண்டாளை திருக்கல்யாணம் செய்த இடம்தான் அழகர்கோவில்.

சுந்தர்ராஜபெருமாள் நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு அதிர்

வேட்டுக்கள் முழங்க கள்ளழகர் வேடம் பூண்டு  தங்கப்பல்லக்கில்

மலையை விட்டு புறப்பட்டார்.







அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை

வழியனுப்பி வைத்ததோடு, அழகர் வரும் வழியில் எல்லாம் பக்தர்கள்

திரண்டு நின்று அழகரை தரிசித்தனர்.

மறுநாளான நேற்று காலை 6 மணிக்கு அழகர் மூன்றுமாவடி

வந்தடைந்தார்.

அங்கு பக்தர்கள் எதிர்கொண்டுஅழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி

நடைபெற்றது.

இதையடுத்து, மதுரை நகருக்குள் வந்த கள்ளழகர் மாநகராட்சி அலுவலகம்

உள்ள அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில்

ஞாயிறுக்கிழமை மாலை 5 மணிக்கு எழுந்தருளினார்.

அங்கும் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது

சொம்பில் சர்க்கரை, பொரிகடலை கலந்து வைத்து, மஞ்சள்துணி பூமாலை

சுற்றி, நெய்வேத்தியம் செய்து அழகரை வழிபட்டனர்.

 பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அங்கிருந்து மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி

திருக்கோயிலில் இரவு 10.30 மணிக்கு . எழுந்தருளினார்.

இங்கு இரவு 1 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில்

சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார்

ஆண்டாளுடைய திருமாலை அழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

 சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும்

வைபவம் துவங்குகிறது.

 பின்னர், புதிய தங்கக்குதிரை வாகனத்தில் ஆரோகணித்த கள்ளழகருக்கு

பச்சைப் பட்டு சாத்தப்பட்டது.

சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை வேஷ்டியிலும், பசுமை

வளத்தை நாட்டில் நிலவச் செய்யும் வகையில் பச்சைப் பட்டு சாத்தியும்

கள்ளழகர் மதுரை வைகை ஆற்றை நோக்கி ஞாயிறு நள்ளிரவில்

புறப்பட்டார்.

 காலை 6.15 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளும் ஆற்று திருக்கண்

மண்டபத்தில் வெள்ளிக் குதிரையில் அருள்மிகு வீரராகவப் பெருமாள்

எழுந்தருளினார்

 காலை 6.40 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்த

கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளினார்

  சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்ககுதிரை வாகனத்தில்

அமர்ந்து காலை 6.45 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா

கோஷம் விண்ணை பிழக்க வைகை ஆற்றில் இறங்கினார்.

ஆற்றில் இறங்கிய அழகரின் குதிரை மூன்று முறை குலுங்கியது.

இதையடுத்து, பக்தர்கள் பட்டாசு வெடித்து அழகரை வரவேற்றனர்



அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள்

நேற்று இரவே வைகை ஆற்றுக்குள் குவியத்தொடங்கி விட்டனர்.

அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் மேளம் தாளம் முழங்க நகர் முழுவதும்

விடிய, விடிய ஆடிப்பாடினர்.




ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபத்தைச் சுற்றி

வந்தார்.

 பின்னர், காலை 6.50 மணிக்கு திருக்கண் மண்டபத்தில் நுழைந்தார்.

 அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் வகையில்

வெள்ளிக் குதிரை குலுங்கியது.

கள்ளழகர் வீரராகவப் பெருமாளைச் சுற்றி வந்து, மண்டபத்தில்

எழுந்தருளினார்

கள்ளழகர் காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு

ராமராயர் மண்டபத்திற்கு   வந்த அழகருக்கு பக்தர்களின் தீர்த்தவாரி

நிகழ்ச்சி  நடை பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது ஒரே நேரத்தில் தண்ணீரை

பீய்ச்சி அடிப்பதை பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும்.

ராமராயர் மண்டகப்படியிலிருந்து பிற்பகலில் புறப்பட்ட கள்ளழகர் இரவு

1 மணிக்கு அழகர் வண்டியூர் வீரராகவ  பெருமாள் திருக்கோயிலை

அடைந்தார்.

இங்கு விடிய, விடிய அழகரை பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை  காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், ஏகாந்த

சேவையும் நடக்கிறது.

காலை 10 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ

வாகனத்தில் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி

வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார்.

அங்கு மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக

முனிவருக்கு சாபவிமோச்சனம் அளிக்கிறார்.

இதனையடுத்து, அருள்மிகு அனுமார் கோயிலில் பிற்பகல் 2.30-க்கு

எழுந்தருளியப் பிறகு இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபம் சென்று

சேர்கிறார்.

அங்கு விடிய விடிய தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தந்து

அருள்பாலிக்கிறார்

அதிகாலை  புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு

அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க கோலத்துடன் எழுந்தருளுகிறார்.

 21 ம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து

அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி

புறப்படுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு

அழகரை  தரிசிப்பார்கள்.

அழகர் மதுரைக்கு வரும் நோக்கம்

அழகர் மதுரைக்கு வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து

பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அதாவது, திருவிக்கிரமன் அவதாரத்தில் தோன்றிய வாமனன், முதல்

அடியால் மேல் ஏழு உலகங்களை அளந்தார்.

பிரம்ம லோகத்தின் அதிபதியான பிரம்மா, கங்கை தீர்த்தத்தால்

பிரம்மாவின் பாதத்தை சுத்தம் செய்தார்.

அப்போது பெருமாளின் பாத சிலம்பிலிருந்து சில நீர்த்துளிகள் அழகர்

மலை மேல் விழுந்து ஆறாக ஓடியது.

அதுவே நூபரகங்கை என்று அழைக்கப்படுகிறது.

  நூபுர கங்கை தீர்த்தத்தில் சுபதஸ்முனிவர் நீராடிக்கொண்டிருந்தார்.

துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் அங்கு வந்தார்.

அவரை கவனிக்காத சுபதஸ் தொடர்ந்து நீராடினார்.

ஆத்திரம் அடைந்த துர்வாச முனிவர் மண்டூகமாய் கடவாய் என

அவரை சபித்தார்.

இதற்கு விமோசனமே இல்லையா என சுபதஸ் முனிவர் வருந்தினார்.

வேதவகி  (வைகை) கரையில் வஞ்சக்கள்வன் முகம்  காணின் உன்

வருத்தம் நீங்கும் என கூறிச்சென்றார் துர்வாச முனிவர்.

இதற்காகத்தான் அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜபெருமாள் மதுரை

புறப்பட்டு வருகிறார் என்பர்

மற்றும் ஒரு கதை

அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார்.

அழகர், மதுரைக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டரில் அமைந்திருக்கும்

அழகர் கோயிலின்  பெருமாள்  ஆவார்.

அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில்

இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார்.

ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை

கேள்விப்படுகிறார்.

ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். 

அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக்

காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக