செவ்வாய், ஏப்ரல் 12, 2011

சித்திரை கனி

. உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் உளம கனிந்த புத்தாண்டு

      நல் வாழ்த்துக்கள்
சித்திரை பிறப்பு என்ற தமிழ் வருட பிறப்பு 14-04-2011 புதன் அன்று வருகிறது.



தமிழ் மாதங்களில் முதலாமவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.

சித்திரை திங்கள் பிறப்பை ஒட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு

கொண்டாட்டங்களும் அமைகின்றன. வட இந்தியாவில் பைசாகி என்றும்,

 கேரளாவில் விஷு என்றும்,

ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.


தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை

பிறப்புக்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும், அவறை பொய்ப்பிக்கும் வகையில்

தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்



சித்திரையில் செய்வது என்ன?


சித்திரை திங்கள் புலருவதற்கு முதல் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில்

பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர்

விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.

காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண்

விழிப்பர்.

இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.


சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி,

செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி

மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க்க  மக்கள்தயாராகின்றனர்.

பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி,

முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும்,

புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்கப் பலனை கேட்பதும்,

தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.

என் நினைவில் சித்திரை கனி-
 

சித்திரை முக்கனிகளும் வரும் காலம்.
அதனால் கண்ணாடி முன் வைக்கும் கனி வகைகளில் மா, பலா, வாழை
முதன்மை வகிக்கும்.
 சாமி அறையில் அல்லது நடுகூடத்தில் ஓர் இடத்தில் முதல் நாள் இரவே
சுத்தம் செய்து கோலம் போட்டு, அதன் நடுவில் ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி வைக்க வேண்டும்.
அதன் சட்டத்தில் சந்தானம், குங்கும போட்டு வைக்க வேண்டும். 
 அதன் முன் ஒரு தாம்பாளத்தில் முக்கனிகள் , வேறு பழங்கள்.
வெற்றிலை, பாக்கு, [வெட்டு பாக்கு]
 மஞ்சள் கொம்பு வைக்க வேண்டும்.
அதன் மேல் பூ,  எலுமிச்சை பழம் வைக்க வேண்டும்.
இனித்தான் முக்கிய பொருட்களே வருகிறது.
பணம், தங்க நகை, தங்க காசு, நாணயங்கள் என
அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் வைக்கலாம்.
 ஒரு படி நிறைய அரிசி வைக்க வேண்டும்.
அந்த வருடத்திற்கு உரிய புது பஞ்சாங்கம் வாங்கி அதற்கும் மஞ்சள், குங்கும
போட்டு வைத்து வைக்க வேண்டும்
ஒரு விளக்கைமஞ்சள், குங்கும பொட்டு இட்டு எண்ணை ஊற்றி,
திரி போட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதிகாலையில் பாட்டியோ, அம்மாவோ எழுந்து விளக்கு ஏற்றி
‘நாடும், வீடும் எல்லா நலன்களையும் பெற்று, அந்த வருடம் நல்ல வருடமாய்
அமைய வேண்டும்என  முதலில் சாமி கும்பிடுவார்கள்.
 பின் வீட்டில் உள்ளவர்களை எழுப்புவார்கள்.
கண்ணை மூடிக் கொண்டே சென்று கண்ணாடியில் தான் விழிக்க வேண்டும்.
காலை குளித்து வந்த பின் தீபாராதனை காட்டி சித்திரை தாயை வணங்க
வேண்டும்..
அந்த காலத்தை நினைத்தாலே நான் சிறு குழந்தை ஆகி விடுகிறேன். 
 பழங்கள் வாங்க கடைவீதிக்கு ஓடுவதும்,
அம்மாவிற்கு உதவி செய்வதும் ஒரே ஆர்வ கோளாறுதான் 
வீட்டு நிலையில் மாவிலை தோரணம் கட்டு வார்கள்.
 வாசலில் பெரிய கோலங்கள் போடப்படும்.
இனிப்பு,  நிறைய பதார்த்தங்களுடன் சாப்பாடு. 
முக்கியமாக பள்ளி விடுமுறை நிச்சியம்.
கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும்?
ஒரு காலகட்டத்தில் நானே அலங்காரங்கள் செய்வேன்.
வாசலில் பெரிய கோலமாக போட சில நாட்களாகவே யோசித்து, அதை
போட்டுப் போட்டுப் பழகி இருந்தாலும், போடும் போதும் டெண்சனாக இருக்கும்.
முதலில் கோலத்திற்கு புள்ளி வைப்பதில்  ஆரம்பிக்கும்- புள்ளிகள் ஒழுங்காய்,
சம இடைவெளிகளில் வைக்க வேண்டும்.
ஒரே சீராய்  கோடுகள் . போட வேண்டும்.
புள்ளிக் கோலங்கள் என்றுமே சிக்கல் கோலங்கள். தான். கொஞ்சம்
பிசகினாலும் முடிந்தது. முடிக்கவே முடியாது.
எல்ல சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டு நல்லபடியாய் போட்டு முடிப்பது
அந்த வயதில் ஒரு பெரிய விசியமாய் இருந்தது.
அக்கம் பக்கம் இருப்பவர்கள் பாராட்ட வேண்டும் என்பதுதான் இந்த
மெனக்கெடலின் basic. 
கோலத்திற்கு செம்மண் கரை கட்ட வேண்டும்
காவிப் பொடியை அளவான நீரில் கரைத்து வைக்க வேண்டும்.
தண்ணீ அதிகமானால் வழிந்து ஓடும
கெட்டியாக இருந்தால் கோடு இழுக்கவே முடியாது.
ஒரு சிறு துணியை இக்கரைசலில் நனைத்து கரை கட்ட வேண்டும்.
 தேங்காய் குடுமியில் அளவாக எடுத்து அதிலும் இடலாம்.
இப்போது பெயிண்ட் பிரஷ் கொண்டு சுலபமாக போடலாம்.
 சரியான பக்குவத்தில் கரைப்பது,
துணியில் அல்லது குடுமியில் ஒழுகாமல் எடுப்பது,
ஒரே அளவாக கோடு இழுப்பது என்று காவி இடுவதும் ஒரு கலைதான்.
தேவை பொறுமை + கவனம் [concentration]
தற்போது புள்ளி கோலங்கள் சிறு புள்ளிகளாகி மறைந்து விடுமோ
எனும் நிலையில் உள்ளது.
தற்போது சுலபமாகவும், வண்ணமயமாகவும் போடும் ரங்கோலி
 இரண்டும் அழகுதான்.
கோலப்பொடியில் போடுவதுகூட சீக்கிரம் பழகி விடும்.
அரிசி மாவரைத்து நீரில் கரைத்து போடும் மாக்கோலம் கொஞ்சம் கஷ்டப்
படுத்தும்.
ஆர்வம, முயற்சி, பொறுமை இருந்தால் முடியாதது எதுவும் இல்லை.
சித்திரமும், கைப் பழக்கமும்-அருமையான சொல் வழக்கு.   அனுபவ உண்மை.  
தற்போது கோலம் போட பெரிய வாசல் இல்லை
நேரம் இல்லை;
தொல்லைக் காட்சி முன் இருக்கும் இந்த நவீன வாழ்க்கையில்
பண்டிகைகளே அரிதாகி வரும் போது நினைவுகள் மட்டுமே இருக்கிறது.
 நம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வது மட்டுமே நம்மால் முடியும்
தொடர்வது அவர்கள் கையில்.

.        
கோலங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக